செய்திகள்

10,12–ம் வகுப்பு தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2016-05-27 15:22 IST   |   Update On 2016-05-27 15:23:00 IST
10,12–ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது :–

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு.நரேந்திரன், தளவாய் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதா, அரியலூர் அரசுநகர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி யு.சு.சிவநந்தினி, ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ளு.சிவநந்தினி, கீழப்பழூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சு.சுவேதா, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.விஜயலெட்சுமி, ஆகிய 6 மாணவ, மாணவிகள் 496500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும், ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி துகலைவாணி, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக்குப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஏ.கவியனுசூர்யா, ரெட்டிபாளையம் ஆதித்ய பிர்லா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி சு.பிரியதர்ஷினி, மனகெதி கெளதமபுத்திரர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சதீஸ்ராஜா, ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு.வெங்கடேஷ் ஆகிய 5 மாணவ, மாணவிகள் 495500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், செந்துறை அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.புவனா, அரியலூர் மா£ன்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.தக்ஷனா, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன்ஹரீஸ்குமார், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜெய்னாசனோபர், ஆண்டிமடம் புனித மார்டின் மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜான்ஷிபா, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கமலி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆ.நந்தினி, ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் நரேந்திரன், செந்துறை அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நதியா, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்யா, அரியலூர் அரசுநகர் மெட்ரிக்குலேசன் மேல்நிலை ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் செல்வகுமார், ஆலத்தியூர் வித்யாமந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சக்தி ஆகிய 15 மாணவ, மாணவிகள் 494500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதுபோன்று, அரியலூர் மாவட்டத்தில், மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ளு.சு.வித்யா 1167ஃ1200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினையும், மான்போர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஸ்னவி 11601200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 11541200 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.47 அரசு ப்பள்ளிகளிலிருந்து 2302 மாணவர்களும், 2403 மாணவிகள் என 4705 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 1885 மாணவர்களும், 2177 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.33 சதவீதமாகும்.இவ்வா£று கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News