அம்பேத்கார் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரி:
புதுவையில் இன்று அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு,பன்னீர் செல்வம், தியாகராஜன், துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம்,மற்றும் எம்.எல்.ஏக்கள் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர்நமச்சிவாயம் தலைமையிலும், அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் புருஷோத்தமன், தேர்தல் பொறுப்பாளர் கண்ணன் தலைமையிலும், தி.மு.கவினர் மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா தலைமையிலும் மாலை அணிவித்தனர்.
பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செயலாளர் விசுவநாதன் தலைமையிலும், பா,ம,கவினர் கோபி தலைமையிலும், மார்க்சிஸ்டு கட்சியினர் ராஜாங்கம் தலைமையிலும் தே.மு.திகவினர் செல்வராஜ், வக்கீல் அசோக்பாபு தலைமையிலும், விடுதலை சிறுத்தை கட்சியினர் தேவபோழிலன் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.
இத்துடன் , ம.தி.மு.க, லோக்ஜனசக்தி, மற்றும் பல்வேறு அரசில் கட்சியினரும் மாலை அணிவித்தனர். மேலும் பீம்சேனா, மாணவர் கூட்டமைப்பு, பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு, அருந்ததியர் மக்கள் சங்கம், நாடக நுண்கலை மன்றம், தாழ்த்தப்பட்டோர் அரசு ஊழியர்சங்கம், அம்பேத்கார் தேசிய காங்கிரஸ் பீமாராவ் மக்கள் சமூக இயக்கம், அம்பேத்கார் தொண்டர்படை ஆகியவற்றின் நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.