செய்திகள்

வெயில் தாக்கம் அதிகரிப்பு: புதுவை மக்கள் கலக்கம்

Published On 2016-04-14 18:26 IST   |   Update On 2016-04-14 18:26:00 IST
கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2–ம் வாரத்தில்தான் தெரியும். ஆனால் இம்முறை புதுவையில் ஏப்ரல் மாதமே கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது.

புதுச்சேரி:

கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2–ம் வாரத்தில்தான் தெரியும். ஆனால் இம்முறை புதுவையில் ஏப்ரல் மாதமே கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அதிகபட்சமாக 104 டிகிரி வெயிலை சந்தித்த மக்கள், நாள்தோறும் 100 டிகிரி வரை வெயிலின் அளவு இருப்பதை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

கத்திரி வெயில் தொடங்காத நிலையில் வெயிலின் உக்கிரம் மேலும் 4 நாட்களுக்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் நடப்பாண்டு பருவ மழை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது. வழக்கமாக பருவமழை 94 சதவீதமாக இருக்கும். இந்தாண்டு 106 சதவீதம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை காலங்களான ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News