செய்திகள்

மானாமதுரையில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2016-04-13 22:49 IST   |   Update On 2016-04-13 22:49:00 IST
மானாமதுரை ஆனந்தவள்ளி அம்மன்-சோமநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை:

மானாமதுரை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி அம்மன்- சோமநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மதுரையில் நடப்பது போல் மானாமதுரையிலும் சித்திரைத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நேற்று ஆனந்தவள்ளி அம்மன்-சோமநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவிலில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் தற்காலிக கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. ஆனந்தவள்ளி அம்மன்- சோமநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கற்பூர பட்டர் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றி வைத்தார்.

திருக்கல்யாணம் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமியும், அம்பாளும் தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

19-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், 20-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந்தேதி வீரஅழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

Similar News