செய்திகள்

விருத்தாசலம் அருகே பெண் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-04-13 09:33 IST   |   Update On 2016-04-13 09:33:00 IST
விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சீவலூர்–உச்சிமேடு சாலையில் நேற்று இரவு 40 வயது மதிக்கதக்க பெண் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பர்த்தனர்.

உடனே கருவேப்பிலங் குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அரிவாளால் வெட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயங்களுடன் கிடந்த அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. ஆடை அலங்கோலமான நிலையில் கிடந்ததால் யாராவது அவரை கற்பழித்து கொன்று அந்த பகுதியில் வீசி சென்றார்களா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான பெண்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News