செய்திகள்
சிங்கம்புணரியில் அனுமதியின்றி சுவர் விளம்பரம்: அதிமுக – திமுக.வினர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தேர்தல் விதிமீறி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரியில் காவல் நிலையம் எதிரே சுவற்றில் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்ததாக தி.மு.க. நகர செயலாளர் யாகூப் மீதும் மற்றும் காளாப்பூர் பெரியபாலம் அருகே அனுமதி இல்லாமல் சுவற்றில் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க. கிளை செயலாளர் ராமநாதன் மீதும், வடசிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் இருவர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் சிங்கம்புணரி அருகே புதுப்பட்டி நியாய விலைக்கடை சுவற்றில் அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்ததாக திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர் ராஜாராம் மீது காளாப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் அளித்த புகாரின்பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.