செய்திகள்
மானாமதுரையில் கார் மோதி நிறுவன மேலாளர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் பஸ் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள அன்னியேந்தலை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது54). இவர் மதுரையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று அலுவலக பணிகளை முடித்துவிட்டு ஆறுமுகம் ஊருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அன்னியேந்தல் கிராமம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.