செய்திகள்

காரைக்குடி அருகே கிட் அன்ட் கிம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2016-04-08 17:56 IST   |   Update On 2016-04-08 17:56:00 IST
காரைக்குடி அருகே உள்ள கிட் அன்ட் கிம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 234 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள கிட் அன்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

கல்லூரியின் இயக்குநர் அண்ணாமலை சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து ஆண்டறிக்கை வாசித்தார். கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–

மாணவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் குறிக்கோளை பற்றி சிந்தியுங்கள், அப்படி சிந்தித்தால் உறுதியாக உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய முடியும்.

பட்டம் பெறுவது மட்டுமே வெற்றியின் முடிவல்ல. அதன்பின்னும் நாம் கற்ற கல்வியில் சாதனைகளை நிகழ்த்த வேண்டிய கடமையுள்ளது அதனை செயலாற்றுவது தான் முழுமயான வெற்றி. “நீயே திறமைசாலி, உன்னால் மட்டுமே முடியும்” என்ற தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும், அதற்கு கனவு காண வேண்டும, அந்த கனவு வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும், அந்த முயற்சிக்கான பணியில் ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் இடைவிடாத பயிற்சி ஆகியவை மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு விருந்தினருடன் தலைவர் அய்யப்பன் இணைந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சிவில் துறையில் 4–வது இடம் பெற்ற பாண்டி, முதுகலை அமைப்பியல் துறையில் 47–வது இடம் பெற்ற முத்துகுமரன் மற்றும் மேலாண்மை துறையில் 49–வது இடம் பெற்ற மாணவி வசந்தி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தவிர 234 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

விழாவில் கிட் அன்ட் கிம் பொறியியல் கல்லூரி முதல்வர் வரதவிஜயன், அழகப்பா மேலாண்மை கல்லூரி, இயக்குநர் கலியமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள், பேராசியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள கலந்து கொண்டனர்.

Similar News