செய்திகள்

சிவகங்கையில் வைகோ உருவபொம்மை எரிப்பு

Published On 2016-04-07 22:29 IST   |   Update On 2016-04-07 22:29:00 IST
கருணாநிதியை விமர்சித்து பேசிய வைகோவை கண்டித்து தி.மு.க. சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை:

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை விமர்சித்து பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து சிவகங்கை நகர் தி.மு.க. சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், மாவட்ட பிரதிநிதி ஜெயகாந்தன், நகர துணைச் செயலாளர்கள் விஜியகுமார், சரவணன், நாகராஜன், வக்கீல் சூர்யநாராயணன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தி.மு.க.வினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Similar News