செய்திகள்
வாலிபரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
சிவகங்கை அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த திருமண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 31). சம்பவத்தன்று இவர் சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி சிவகங்கையை அடுத்த பெரியகோட்டையைச் சேர்ந்த பாலசந்தர் (வயது 24), மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் (48), சிவசக்தி (27), பாலகிருஷ்ணன் (50) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
சிவகங்கையை அடுத்த திருமண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 31). சம்பவத்தன்று இவர் சிவகங்கை சுண்ணாம்பு காளவாசல் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி சிவகங்கையை அடுத்த பெரியகோட்டையைச் சேர்ந்த பாலசந்தர் (வயது 24), மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் (48), சிவசக்தி (27), பாலகிருஷ்ணன் (50) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.