உள்ளூர் செய்திகள்

காந்திமாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை

Published On 2023-02-05 15:04 IST   |   Update On 2023-02-05 15:04:00 IST
  • இரவு வீட்டை பூட்டி விட்டு மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.
  • வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சரவணம்பட்டி,

கோவை கணபதி அடுத்த காந்திமா நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(62). இவரது மனைவி ரஞ்சனா(46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இன்று அதிகாலை மகேந்திரன் வீடு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பகத்தினர் உடனடியாக இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகையும் மாயமாகி இருந்தது. இவர்கள் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பதிவுகளை கைப்பற்றினர்.

மேலும் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News