உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே மாற்றுத்திறனாளி மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை 2 பேர் போக்சோவில் கைது

Published On 2022-07-03 03:58 GMT   |   Update On 2022-07-03 03:58 GMT
  • வருசநாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • 2 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மைனர் பெண் தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். தந்தை இறந்துவிட்டதால் தாய் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

அவர் இரவு நேர பணிக்கு சென்று வருகிறார். இதனை பயன்படுத்தி அதேபகுதிைய சேர்ந்த சுதாகர்(19) மற்றும் 15 வயது சிறுவன் வீட்டுக்குள் புகுந்து மைனர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து வருசநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியன் தலைமையில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்ததால் சுதாகர் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News