உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூர் அருகே 2 வாலிபர்கள் மாயம்

Published On 2023-07-24 13:23 IST   |   Update On 2023-07-24 13:23:00 IST
  • உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த வர் செந்தூரப்பாண்டி (வயது 31). சம்பவத்தன்று வீட்டில் இருந்த செந்தூரப்பாண்டி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் இம்ரான் ரியாஸ் (23). சம்பவத்தன்று வெளியே சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News