உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2023-05-04 08:31 GMT   |   Update On 2023-05-04 08:31 GMT
  • கவுதமி வங்கியில் பணம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பளூதியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கவுதமி (வயது19).

இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று கவுதமி வங்கியில் பணம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

இதுகுறித்து முருகன் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பென்னா–கரம் சவுளூபட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி கீதா (வயது23). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கீதா கடந்த 16-ந் தேதி அன்று எலும்பன்மந்தையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று அங்கிருந்து தனது கணவர் வீட்டிற்கு சென்றுவருவதாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் கீதா கணவர் வீட்டிற்கு வரவில்லை. தாய் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.

இதனால் பதறிப்போன கீதாவின் தாயார் பாஞ்சாலி பல இடங்களில் தனது மகளை தேடிபார்த்தார். எங்கு தேடியும் கீதா கிடைக்க வில்லை. இகுதறித்து பாஞ்சாலி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

Tags:    

Similar News