உள்ளூர் செய்திகள்

கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயம்

Published On 2022-06-28 09:12 GMT   |   Update On 2022-06-28 09:12 GMT
  • கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயமானார்கள்.
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார்.

கடலூர்:

கடலூர் முதுநகர் குட்டைகார தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 35). இவரது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பூமாது மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் 12 -ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் உறவினர் 12- ம் வகுப்பு மாணவி 2 பேரும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News