உள்ளூர் செய்திகள்
- வாய் தகராறு ஏற்பட்டதில் கூலி தொழிலாளியை மூவரும் கைகளால் தாக்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன பீரான், ரகுபதி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம். செம்படம் புத்தூர் அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவம் (56). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பெள்ளம் பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (32), சின்ன பீரான் (23), ரகுபதி (25) ஆகிய மூவரும் வயலில் சென்றனர்.
அப்போது வாய் தகராறு ஏற்பட்டதில் கூலி தொழிலாளியை மூவரும் கைகளால் தாக்கியதில் காயம் அடைந்த சிவன் சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணனின் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ன பீரான், ரகுபதி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.