உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருட்டு வழக்கில் ௨ பேருக்கு சிறை தண்டனை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-06-21 06:21 GMT   |   Update On 2022-06-21 06:21 GMT
  • கோவை - சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருட்டு
  • 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு

அவினாசி :

கடந்த 26.1.2018-ம் ஆண்டு சேடர்பாளையம் சாய் கார்டன் பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் சங்கிலி, ரூ. 45 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 16.2.2018-ம் ஆண்டு கோவை சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருடி சென்ற வழக்கில் அவினாசி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சபீனா விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் (46) என்பவருக்கு தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

அவினாசியை அடுத்த பெருமாநல்லூர்வலசு பாளையத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள் (வயது 53). இவர் கடந்த 25.7.2016 அன்று சாலையில் நடந்த சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் அம்மணியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் நடுப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்கிற மோகன் பிரபுவை (38) கைது செய்தனர். இதையடுத்து இவர் மீதான வழக்கு அவினாசி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பிரபு என்கிற மோகன் பிரபுவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சபீனா தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News