உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே பெண் உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-10-27 04:03 GMT   |   Update On 2022-10-27 04:03 GMT
  • குடும்ப பிரச்சினை காரணமாக பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
  • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ரம்யா(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிக்காமல் ரம்யா செல்போன் பார்த்து வந்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து(27). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News