உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் மாயம்

Published On 2023-03-18 15:17 IST   |   Update On 2023-03-18 15:17:00 IST
  • கடந்த 13-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக வீட்டில் கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது31), இவர் அதே பகுதியில் மேன்பவர் ஏஜென்சீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக வீட்டில் கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சிடைந்த அவரது மனைவி விவேதா(23) கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தேன்கனிகோட்டை அருகே உள்ள பெரிய சாதனக்கல் பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சிவா(32) கடந்த 6-ம் தேதி கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மாதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News