உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

போடி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-08-24 05:32 GMT   |   Update On 2022-08-24 05:32 GMT
  • போடி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் மாயமாகினர்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி லீலாவதி (வயது 78). இவர் தனது உறவினர் பாண்டியன் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த லீலாவதி திடீரென மாயமனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசிந்தலைசேரியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணபெருமாள் (21). இவர் சம்பவத்தன்று தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News