தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்
- சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி சிவாஜிநகரை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ஜனனி(17). தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஜனனி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் கருப்பையா(55). கூலி தொழிலாளி. கேரளாவில் உள்ள தனது அண்ணனை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை தேடி வருகின்றனர்.