கோப்பு படம்
தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
- உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினைகாரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேணி (வயது 25). இவர்களது மகள் பூஜா (5). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகராஜிடம் கோபித்துக் கொண்டு பூஜா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் வேணிதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 36). இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.