உள்ளூர் செய்திகள்

நெகமம் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2023-03-20 09:35 GMT   |   Update On 2023-03-20 09:35 GMT
  • வடசித்தூரில் பேக்கரி அருகே சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
  • 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடசித்தூர் நால்ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நெகமம் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி விற்னை செய்து கொண்டு இருந்த கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 49), குருநல்லி பாளையத்தை சேர்ந்த அம்மாச்சியப்பன் (69) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News