உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 2 பேர் கைது: கிராம உதவியாளர் உள்பட 73 பேரிடம் கைவரிசை

Published On 2023-06-17 08:02 GMT   |   Update On 2023-06-17 08:02 GMT
  • செல்வம் கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார்.
  • செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார். இவர் கடந்த அரசு பணிக்கு வருவதற்கு முன்பாக சென்னையை தலைமையிடமாக கொண்ட பி.எம்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணி செய்தார். அங்கு எழுத்தராக பணியாற்றிய சென்னை தண்டையார்பேட்டை சிவா (40) என்பவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் செல்வத்தை தொடர்பு கொண்ட சிவா, தனக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால், பணம் கொடுத்தால் வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வம், தனது மகள், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு ரூ.13 லட்சத்தை செல்வத்திடம் கொடுத்தார். இது தவிர உறவினர்கள் நண்பர்கள் என 71 பேரிடம் ரூ.79 லட்சத்து 54 ஆயிரத்து 600-ஐ வசூலித்து சிவாவிடம் கொடுத்துள்ளார். அப்போது சென்னை பாடியநல்லூரை சேர்ந்த ரமேஷ் (19) சிவாவுடன் இருந்து பணத்தை பெற்றுள்ளார். 

செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார். இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது, சிவா கூறிய பதில் செல்வத்திற்கு சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சிவாவிடம் செல்வம் கேட்டுள்ளார். அவர் பணத்தையும் கொடுக்காமல், அரசு வேலையும் வாங்கித் தராமல், சரியான பதிலும் கூறாமல் செல்வத்தை அலைக்கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், அரசு வேலை வாங்கித் தருவதாக சிவா செய்த பண மோசடி குறித்து எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த எலவனாசூர்கோட்டை போலீசார், வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு சிவா, ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியது உண்மை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோ கன்ராஜ் உத்தரவின்பேரில் பண மோசடியில் ஈடுபட்ட சிவா, ரமேஷ் ஆகிய 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News