உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சாணார்பட்டி அருகே அடுத்தடுத்து 2 பேர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-10-19 07:46 GMT   |   Update On 2023-10-19 07:46 GMT
  • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
  • சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முருகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வெகுநேரமாகியும் எழுந்து வெளியே வரவில்லை.இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு உள்ளே சென்று முருகேசனை எழுப்ப முயற்சித்தனர்.ஆனால் அவர் இறந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில் அங்குவந்த சாணார்பட்டி போலீசார் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கூவனூத்து குரும்ப பட்டியை சேர்ந்தவர் சேவுகன் (வயது 50) விவசாயி.இவர் தோட்டத்து வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News