உத்தமபாளையம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
- விபத்துகளில் பைக் மோதியும், தவறிவிழுந்தும் 2 பேர் பலியாகினர்.
- ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா(60). இவர் புல் அறுப்பதற்காக தனது மோட்டார் சைக்கி ளில் நாராயணத்தே வன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தை சேர்ந்த வசந்தகுமார்(22) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து மோதினார்.
இதில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த முத்தையா கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(54). இவர் சுருளிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். கோழிப்பண்ணை அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பார்த்திபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.