உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை

Published On 2022-08-18 04:19 GMT   |   Update On 2022-08-18 04:19 GMT
  • தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே தேவாரம் மூணான்டிபட்டியை சேர்ந்தவர் பிரிதரன்(35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வ.உ.சி மைதானத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோவித்துக்கொண்டு பண்ணைபுரத்தில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த பிரிதரன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜோதிபாசு(33). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News