உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறு மோதலில் 2 பேர் கைது
- இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக பிரபாவதியை, வெங்கடேஷ் தாக்கினார்.
- புகாரின் பேரில் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள அகல கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது28). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28).
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக பிரபாவதியை, வெங்கடேஷ் தாக்கினார். இதில் காயமடைந்த பிரபாவதி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.