உள்ளூர் செய்திகள்
- பேசிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- கெலமங்கலம் போலீசார் கிருஷ்ணகுமார், மாதேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேசா காலனியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது21). கட்டிட மேஸ்திரி.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்க ளான கிருஷ்ணகுமார் (23), மாதேஷ் (21) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி நிரஞ்சனை இரண்டு நண்பர்களும் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் நிரஞ்சனை தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து நிரஞ்சன் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் கிருஷ்ணகுமார், மாதேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.