உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

Published On 2023-04-02 15:10 IST   |   Update On 2023-04-02 15:10:00 IST
  • குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய சபரி என்பவரை கைது செய்தனர்.
  • இளங்கோ (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார், மத்தூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

அப்போது அங்கு குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த நாகம்பட்டியை சேர்ந்த சபரி (வயது 23) என்பதை கைது செய்தனர்.

இதேபோல் ஊத்தங்கரை போலீசார் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு குடிபோதையில் பேசிக் கொண்டிருந்த வண்டிக்காரன் கொட்டாயை சேர்ந்த இளங்கோ (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News