உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது: பணம்-ேமாட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2023-06-30 07:43 GMT   |   Update On 2023-06-30 07:43 GMT
  • கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது.
  • வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பாலம் கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 1000 ரூபாய் ,பணம், 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்,மற்றும்2 மோட்டார் சைக்கிள்கள், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது.

தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 30,)அதே பகுதியை சேர்ந்த ரசாக் பாஷா (வயது 35,) என்பதும் இவர்கள் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 ேமாட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News