உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

Published On 2022-12-12 15:09 IST   |   Update On 2022-12-12 15:09:00 IST
  • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்
  • போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

களக்காடு:

நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் மறுகால்குறிச்சியை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பு (வயது 23), முருகன் (23) என்பதும், இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News