உள்ளூர் செய்திகள்

செல்போன் திருடியதை தட்டிக்கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-02-25 15:03 IST   |   Update On 2023-02-25 15:03:00 IST
  • செல்போனை அடகு வைத்து 3 பேர் பணம் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
  • கெலமங்கலம் போலீசார் சுரேஷ், சிவகுமார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஏ.கொத்தாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 20). இவரது செல்போன் திருடு போயுள்ளது.

இந்நிலையில் சாந்தம்மா என்ற பெண் மூர்த்தியின் செல்போனை அடகு வைத்து 3 பேர் பணம் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது செல்போனை திருடி அடகு வைத்த அக்கொண்டபள்ளியை சேர்ந்த சுரேஷ் (28), சிவகுமார் (20), ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்த நாகராஜ் (30) ஆகியோரிடம் சென்று நியாயம் கேட்டபோது சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்து தேன்கனி கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கெலமங்கலம் போலீசார் சுரேஷ், சிவகுமார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News