உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே முன்விரோதத்தில் 2 தரப்பினர்கள் மோதல்: 7 பேர் மீது வழக்கு- 3 பேர் கைது

Published On 2022-10-19 08:43 GMT   |   Update On 2022-10-19 08:43 GMT
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர்.
  • சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கீழ் அருங்குணம்பகுதியை சேர்ந்தவர் கவியரசு(வயது 23).இவரது தந்தை தங்கவேலுவை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக2 தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கவியரசு, அவரது உறவினர் ராஜதுரை ஆகியோர் குச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததனர். மேலும் சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் ராஜதுரை மற்றும் அமிர்தலிங்கம் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் கீழ் அருங்குணம் சேர்ந்தவர்கள் சேதுபதி, கண்ணதாசன், ஆகாஷ், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோர் மீதும் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், ராஜதுரை என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சேதுபதி, கண்ணதாசன், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News