உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே மின்வாரிய ஊழியர் உள்பட 2 பெண்கள் தற்கொலை

Published On 2023-01-26 12:16 IST   |   Update On 2023-01-26 12:16:00 IST
  • தேனி அருகே வயிற்றுவலியால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் குமார் மனைவி ராதிகா(43). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். குமார் இறந்து விட்டதால் அவர் வேலை பார்த்த மின்வாரிய அலுவல கத்தில் ராதிகாவிற்கு பணி ஆணை கிடைத்தது. கடந்த 9 வருடங்களாக தேவாரம் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் மனஉளைச்ச லில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி கே.ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் பரமன் மகள் வினிதா(24). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த செல்வ க்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. செல்வக்குமார் இறந்ததால் தாய் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த வர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News