உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலி

Published On 2023-10-01 05:45 GMT   |   Update On 2023-10-01 05:45 GMT
  • தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
  • அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது.

தேனி:

ஆண்டிபட்டி அருகே குள்ளப்புரம் கோவில் புரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54). இவர் தனது உறவினர் பழனிச்சாமி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நண்பர்கள் 8 பேருடன் தேனி மாவட்டம் போடி வந்தார். தேவாரம் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பாலமுருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் அவருடன் வந்த 8 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News