உள்ளூர் செய்திகள்

லாரி மோதி 2 பேர் சாவு

Published On 2023-06-15 14:59 IST   |   Update On 2023-06-15 14:59:00 IST
  • அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மோதியது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தின்னூர் எக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரம் (வயது35). கூலி தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் இவரது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மோதியது. இதில்பலத்த காயமடைந்த சவுந்திரம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓசூர் அருகே உள்ள ஆவலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (40). கூலி தொழிலாளி.இவர் பெங்களுர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கோபியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் கோபி மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News