சிதம்பரத்தில் குட்கா விற்ற 2 பேர் கைது
- சிதம்பரத்தில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய போலீசார் சாக்கினை பிரித்து பார்த்தனர்.
கடலூர்:
சிதம்பரம் சின்னகடை பகுதிகளில் சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் சாக்கில் வைத்து பொருட்களை எடுத்து வந்ததை பார்த்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய போலீசார் சாக்கினை பிரித்து பார்த்தனர்.
அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓமக்குளத்தைச் சேர்ந்த அபாஸ் அலி (வயது 42), என்பதும், இவர் சேதியூர் பகுதியில் உள்ள கமலக்கண்ணன் (50) என்பவரிடமிருந்து இதனை வாங்கி வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அபாஸ் அலி, கமலக்கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.