வீட்டை விட்டு வெளியே சென்ற 2 சிறுமிகள் மாயம்
- பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் சிறுமி மாயமானது தெரியவந்தது.
- சிறுமியின் பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது தனது மகளை காணவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உடனே பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் சிறுமி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
மொரப்பூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றார். சிறுமியின் பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது தனது மகளை காணவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.