உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 சிறுமிகள்-பெண் மாயம்

Published On 2023-01-01 15:16 IST   |   Update On 2023-01-01 15:16:00 IST
  • மத்தூர் போலீசில் சிறுமியின் தந்தை அசோகன் புகார் செய்தார்.
  • போலீசார் வழக்கு பதிந்து மயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள வாலிபட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 29-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.

எங்கு தேடியும் அவரை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மத்தூர் போலீசில் சிறுமியின் தந்தை அசோகன் புகார் செய்தார்.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டபெல கொண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த நாராயணரெட்டி என்பவரது மனைவி அர்ச்சனா (வயது 26) என்பவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவர் எங்கே சென்றார் என்பது குறித்து அந்த விதமான தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் நாராயணரெட்டி மத்திகிரி போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.

இதேபோல கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார் என்பது குறித்து அந்த விதமான தகவலும் கிடைக்க வில்லை.

இது குறித்து அவரது தந்தை மார்ட்டின் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News