தூத்துக்குடி அருகே வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் கைது
- தூத்துக்குடி மகாலெட்சுமி நகரை சேர்ந்த முகமது ரியாஸ் நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- ரியாசை முத்தையாபுரத்தை சேர்ந்த மாரிசெல்வம்(23), கனக சபாபதி(29) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மகாலெட்சுமி நகரை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ரியாஸ்(வயது 22).
இவர் நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் ரியாசை முத்தையாபுரத்தை சேர்ந்த மாரிசெல்வம்(23), கனக சபாபதி(29) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
ரியாசின் குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்பு முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது ரியாசும், மாரி செல்வம், சபாபதி ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் ரியாசின் குடும்பத்தினர் வீடு மாறிய பிறகும், ரியாஸ் அடிக்கடி முத்தையாபுரம் சென்று நண்பர்களுடன் பேசி பழகி வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் மாரிசெல்வம், கனக சபாபதி ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திய போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த மாரி செல்வம், கனகசபாபதி ஆகிய இருவரும் ரியாசை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.