உள்ளூர் செய்திகள்
- இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அபிமானு கானார் (வயது 30), கிருஷு சந்திர கானார் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வட மாநில வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 8 ஆயிரத்து 200 கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிமானு கானார் (வயது 30), கிருஷு சந்திர கானார் (37) ஆகிய அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகத்தில் பாப்பாரபட்டி அன்ன நகர் பகுதியில் லாட்டரி விற்ற மணிகண்டன் (41), பெத்தம்பட்டி பகுதியில் லாட்டரி விற்ற முனியப்பன் (34) ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.