உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-03-15 15:38 IST   |   Update On 2023-03-15 15:38:00 IST
  • குடிபோதையில் இருந்த இரண்டு பேரும் சேர்ந்து பிரசாந்தை பெல்டால் தாக்கியுள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் துளசி நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.

கடந்த 13-ம் தேதி ஓசூர் சிப்காட் மூக்கண்ட பள்ளியில் உள்ள இவரது நண்பர் பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த எம்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா (34) முரளி (28) இரண்டு பேரும் சேர்ந்து பிரசாந்தை பெல்டால் தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த பிரசாந்த் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News