உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது
- சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது.
- கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
சேலம்:
சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது. இதில் மெய்யனூர் வி.எம்.ஆர். நகரை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திகேயன்(20) காயம் அடைந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாசநாயக்கன்பட்டி மதியழகன் மகன் விஷ்ணு (21), தாரமங்கலம் பவளத்தானூர் பகுதியை சேர்ந்த சத்தியகுமார் மகன் திலிபன்(20) ஆகியோர் மீது தகாத வார்த்தைகள் பேசுதல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.