உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே 17 வயது பெண் மாயமான சம்பவம்: கடத்திய காதலன், மணந்த கணவன் 2 பேரும் கைது

Published On 2022-11-05 13:42 IST   |   Update On 2022-11-05 13:42:00 IST
  • கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
  • நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள கணபதி நகரை சேர்ந்த 17 வயது பெண் ,நவீன்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இது அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அருண்குமார் என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே அந்த பெண்ணை காதலித்த நவீன்குமார் அவரை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

Similar News