உள்ளூர் செய்திகள்

லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் காயம்

Published On 2022-10-14 15:44 IST   |   Update On 2022-10-14 15:44:00 IST
  • லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்து
  • டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.

சேலம்:

சேலம் அருகே மகுடஞ்சா வடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி சென்றுகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரி மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று காயமடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News