உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.142.95 கோடி வங்கி கடன் உதவி வழங்கும் விழா

Published On 2022-12-29 15:18 IST   |   Update On 2022-12-29 15:18:00 IST
  • சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, வங்கி கடனும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
  • பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

திருச்சியில் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அந்தந்த மாவட்ட சுய உதவிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டது.

அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் திருச்சி நிகழ்ச்சியை அகன்ற திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய பின்னர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தலைமை கொறடா கோவி செழியன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கி சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தஞ்சை மாவட்டத்தில் 491 சுய உதவி குழுக்களுக்கு ரூ.21.99 கோடி கடன் உதவி, 280 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.120.96 கோடி மதிப்பிலான வங்கி கடனும் ஆக கூடுதல் ரூ.142.95 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் 771 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர சேகரன், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News