வடமதுரை அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் பயங்கர மோதல் 13 பேர் மீது வழக்கு
- இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
- இந்த மோதல் காரணமாக போலீசார் 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள மம்மானியூரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதேஊரை சேர்ந்த ராமன்(70) என்பவர் தனது பெயருக்கு ரசீது வாங்கி வைத்திருந்தார். இதனை ரத்து செய்ய வேண்டும் என முத்துப்பாண்டி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
சம்பவத்தன்று கொம்பேறிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் இதுதொட ர்பாக முத்துப்பாண்டி மற்றும் அவரது ஆதரவா ளர்கள் மனுகொடுக்க வந்தனர். அப்போது அங்கு வந்த ராமன் தரப்பினருக்கும், முத்துப்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ராமன், பிரபாகரன், முருகன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே வடமதுரை போலீசில் புகார் அளித்த னர்.
அதன்பேரில் முத்து ப்பாண்டி, சின்னத்துரை, சின்னச்சாமி, மூக்கையா, வெள்ளைச்சாமி, மணி உள்பட 13 பேர் மீது வட மதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.