உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது

Published On 2022-12-13 08:00 GMT   |   Update On 2022-12-13 08:00 GMT
  • கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், முதுநகர், காடாம் புலியூர் ஆகிய பகுதிகளில் 240 கிராம் கஞ்சாவும், மங்க லம்பேட்டை, கருவேப்பி லங்குறிச்சி, புதுப்பே ட்டை, ஸ்ரீமுஷ்ணம், நெல்லிக்கு ப்பம், ஆலடி ஆகிய பகுதி களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து வழக்கு பதிவுசெய்தனர். இதில் கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் சூர்யா (26), சிதம்பரம் நடராஜன் (41), கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் (22), பணிக்கன் குப்பம் நவீன் (21), கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ராகுல் (21), ஆகியோரை கஞ்சா வழக்கிலும், மங்கலம் பேட்டையை சேர்ந்த அக்பர் அலி (51), சிவகலை (34) என்ற பெண், கருவேப்பி லங்குறிச்சி காசிநாதன் (55), பண்ருட்டி ஏழுமலை (61), ஸ்ரீமுஷ்ணம் ராஜதுரை (61), நெல்லிக்குப்பம் கணபதி (50), விருத்தாச்சலம் வீரா ரெட்டி குப்பம் பீட்டர்நாயகம் (64) ஆகியோரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News