உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ரமேஷ் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை படத்தில் காணலாம்.

சேலம்

குர்லா ரெயிலில் கடத்தி வந்த 12கிலோ புகையிலை பறிமுதல்

Published On 2022-10-02 13:52 IST   |   Update On 2022-10-02 13:52:00 IST
  • லோக்மானியாவில் இருந்து கோவை செல்லும் குர்லா ரெயிலில் குட்க கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
  • சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 12 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம்:

லோக்மானியாவில் இருந்து கோவை செல்லும் குர்லா ரெயிலில் குட்க கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சரவணன், கண்ணன், சாய் அரசு ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் உள்ள புளூ கலர் சொல்டர் பேக்கை சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 12 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலையை பறிமுதல் செய்து கடத்தி வந்த இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (37) என்பது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News